தூத்துக்குடி முத்தையாபுரம் ஜே.எஸ்.நகர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் ரூ.55 லட்சம் மதிப்பீட்டி
தூத்துக்குடி முத்தையாபுரம் ஜே.எஸ்.நகரில் அமைந்துள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில், ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் சிறப்பு நிதியின் கீழ் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை, திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.



