ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் 156வது பிறந்த நாள் : தமிழ்நாடு அரசு சார்பில் கொண்டாட்டம்
தூத்துக்குடி மக்களின் தந்தை என போற்றப்படும் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் 156வது பிறந்த நாள் தமிழ்நாடு அரசு சார்பில் அவரது மணிமண்டபத்தில் அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை.

தமிழ்நாடு அரசு சார்பில் தூத்துக்குடி மக்களின் தந்தை என போற்றப்படும் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் 156 வது பிறந்த நாள் தூத்துக்குடி முழுவதும் கொண்டாடப்பட்டது.
இதனை முன்னிட்டு எம்.ஜி.ஆர் பூங்கா அருகில் அமைந்துள்ள அன்னாரது மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

