200 தொகுதிகளில் திமுக வெல்லும் – காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் MLA நம்பிக்கை

200 தொகுதிகளில் திமுக வெல்லும் – காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் MLA நம்பிக்கை

வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் நிச்சயம் திமுக கூட்டணி வெற்றி பெறும் என காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட திமுக மற்றும் திமுக இளைஞர் அணி சார்பில் தமிழ்நாடு ஓரணியில் என்ற கருத்தரங்கம் தனியார் மஹாலில் நடைபெற்றது.

இதில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் கட்சி நிர்வாகிகளிடம் சட்டமன்ற தேர்தலில் தங்களின் நிலைப்பாடு என்ன வெற்றிவாகை சூடுவதற்கு திமுகவின் சாதனைகளை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்வது போன்ற யுக்திகளை எடுத்துரைத்து பேசினார்.

அதன் பின்பு செய்தியாளர்கள் சந்தித்து பேசிய அவர், “தமிழ்நாடு ஓரணியில் என்ற இலக்கில் வெற்றி வாகை சூட உள்ளோம். அனைத்து தரப்பு பொதுமக்களும் கலைஞரின் மகளிர் உதவித்தொகை திட்டம், மகளிர் விடியல் பயணத் திட்டம் ஆகியவை மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நான்கு லட்சம் புதிய உறுப்பினர் சேர்க்கை நடத்த இலக்கு திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது” என தெரிவித்தார்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *