கருணாநிதி சிலைக்கு மரியாதை – மதுரையில் அமைச்சர் பங்கேற்பு
தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு மதுரை மாவட்டம், மதுரை மேற்கு வட்டம், விளாச்சேரி கிராமத்தில் உள்ள நினைவு இல்லத்தில் அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் திரு.கே.ஜே.பிரவீன் குமார் இ.ஆ.ப., மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.கோ.தளபதி அவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செய்தனர்.

