வாலாஜாபாத் வடக்கு ஒன்றியத்தின் சார்பில் பொங்கல் விழா
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் வாலாஜாபாத் வடக்கு ஒன்றியத்தின் சார்பில் ஒன்றிய செயலாளர் படு நெல்லி பாபு தலைமையில் பொங்கல் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
தமிழர் திருநாள் பொங்கல் விழா பரந்தூர்- வீனஸ் ரெசார்ட் வளாகத்தில், திராவிட பொங்கல் விழா ஒன்றிய செயலாளர் கொடி நெல்லி பாபு தலைமையில் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கழக செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் தலைமையில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட கழகத் துணைச் செயலாளருமான சிறுவேடல் க.செல்வம், கழக கொள்கை பரப்பு செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான திருமிகு CVMP எழிலரசன், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ஜெ.ராமகிருஷ்ணன் மற்றும் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஆர்.கே. தேவேந்திரன், எஸ்.ராஜலட்சுமி குஜராஜ் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், கிளை கழக செயலாளர், கழக மூத்த முன்னோடிகள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு திராவிட பொங்கலை பல்வேறு போட்டிகள் மற்றும் பொங்கல் வைத்து விமர்சையாக கொண்டாடப்பட்டது.


