காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் கொத்தடிமை ஒழிப்பு தின உறுதிமொழி

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் கொத்தடிமை ஒழிப்பு தின உறுதிமொழி பல்துறை அலுவலர்கள் பங்கேற்பு.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
இதில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை ஒட்டி துண்டு பிரசுரங்கள் வழங்கி கொத்தடிமை ஒழிப்பு தொழிலாளர் தின உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் எடுக்கப்பட்டது.

இதில் பல்வேறு துறை அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதனை தொடர்ந்து திருக்குறள் வார விழா ஒட்டி வினாடி வினா எழுத்து தேர்வு, திருக்குறள் ஒப்புவித்தல், ஓவியப்போட்டி, ஆகியவை நடைபெற்று ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதில் தொழிலாளர் துறை உதவி ஆணையர் அமலாக்கம் சுதா, மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ஆர்த்தி உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



