காஞ்சி கோட்டம் செந்தூர் முருகன் திருக்கோவில் தெய்வத்தமிழ் திரு குடமுழுக்கு நன்னீராட்டு விழா

காஞ்சிபுரத்தில் காஞ்சி கோட்டம் செந்தூர் முருகன் திருக்கோவில் தெய்வத்தமிழ் திரு குடமுழுக்கு நன்னீராட்டு விழா விமர்சையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் அருகே காஞ்சி கோட்டம் அருள்மிகு செந்தூர் முருகன் ஆலய தெய்வத்தமிழ் திருக்குறள் விமர்சையாக நடைபெற்றது.
வள்ளியம்மாள் மீனாட்சி சுந்தரம் என்கின்ற வேண்டா வரம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் தவத்திரு திருவாரூர் நடராஜன் சுவாமிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்.
இதில் சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்று மூலவர் விமானம் மற்றும் மூலவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சித்தர்களுக்கு பிரசாதங்களும் வழங்கப்பட்டது. தொடர்ந்து காலை 10 மணி சிறப்பு மகா அபிஷேகம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டு பிரசாதங்களும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ‘வள்ளியம்மாள் மீனாட்சி சுந்தரம்’ என்கின்ற வேண்டா வரம். மற்றும் பொதுமக்கள் வெள்ளைக் குளம் தெரு, வேதாச்சலம் நகர் பகுதி வாசிகள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.


