காஞ்சிபுரத்தில் திமுக வேட்பாளர்கள் பல்வேறு தலைவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை
காஞ்சிபுரத்தில் திமுக வேட்பாளர்கள் பல்வேறு தலைவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உத்திரமேரூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் வித்யா சுகுமார் ஆகியோர் வேட்பாளராக தலைமைக் கழகம் அறிவித்ததை தொடர்ந்து காஞ்சிபுரத்தில் உள்ள அறிஞர் அண்ணா, டாக்டர் அம்பேத்கர், கலைஞர் உள்ளிட்ட தலைவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், செயலாளர் சந்துரு தசரதன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் சுகுமார், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய மாநகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியினை மாநகர செயலாளர் சி கே வி தமிழ்ச்செல்வன் சிறப்பாக செய்திருந்தார்.

