காஞ்சிபுரம் ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகா வித்யாலயா பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு துவக்க விழா
காஞ்சிபுரம் ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகா வித்யாலயா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பு உள்ளிட்ட பல்வேறு துறை படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் ஏனாத்தூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்தியாலயா பல்கலைக்கழகத்தில் பொறியியல் உள்ளிட்ட பல்வேறு துறை படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு துவக்க விழா விமர்சையாக நடைபெற்றது.
இதில் சேர்க்கை குழு தலைவர் டின் கே வெங்கட்ராமன் வரவேற்புரை ஆற்றினார்.

துணைவேந்தர் ப்ரொபசர் ஜி சீனிவாசு, சார்பு துணைவேந்தர் ப்ரொபசர் வசந்த் மேத்தா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
சிறப்பு அழைப்பாளராக காஞ்சி காமகோடி பீட சாரிட்டபிள் டிரஸ்ட் செயலாளர் சுரேஷ் குருமணி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

இதில் பேராசிரியர்கள் கமிட்டி மெம்பர்கள் மாணவ மாணவிகள் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் கல்லூரி தந்து விடுதி பொறுப்பாளர் செந்தமிழ் செல்வன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கலந்துகொண்ட அனைவருக்கும் சேர்க்கை குழு துணைத் தலைவர் ராஜ்மோகன் நன்றிகளை தெரிவித்தார். மகளிருக்கான சட்டப் படிப்பு முதல் முதலாக இங்கு தான் துவங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

