கலைஞரின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்செந்தூர் அருகே கிரிக்கெட் போட்டி

கலைஞரின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்செந்தூர் அருகே கிரிக்கெட் போட்டி

திருச்செந்தூர் அருகே தண்டுபத்து ஊராட்சியில், கலைஞரின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கனிமொழி கருணாநிதி எம்.பி பரிசுகள் வழங்கினார்.

 தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், முத்தமிழறிஞர் கலைஞரின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.

இதில், வெற்றி பெற்ற அணிகளுக்கும், பங்கேற்ற 200 அணிகளுக்கும் கோப்பைகளையும், கிரிக்கெட் உபகரணங்களையும் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி மற்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினார்கள்.

முத்தமிழறிஞர் கலைஞரின் 102வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன.

இதில் 200க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு போட்டியிட்டன. இந்த போட்டிகளில் முதலாவது 10 இடங்களை பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழாவும், மேலும் போட்டிகளில் பங்கேற்ற 200 அணிகளுக்கு கிரிக்கெட் பேட் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சியும் திருச்செந்தூர் அருகிலுள்ள தண்டுபத்து ஊராட்சியில் நடைபெற்றது.

 இந்த நிகழ்ச்சியில், கனிமொழி கருணாநிதி எம்.பியும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனும் கலந்து கொண்டு, கிரிக்கெட் போட்டியில் முதலிடம் பெற்ற சிவலூர் கிரிக்கெட் அணிக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும் வெற்றிக்கோப்பையும் வழங்கினர்.

இதுபோல, முதல் 10 இடங்களைப் பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசும் கோப்பைகளும் வழங்கப்பட்டன.

மேலும், இந்த கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற 200 அணிகளுக்கும் கிரிக்கெட் பேட் மற்றும் பிற உபகரணங்கள் வழங்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, திருச்செந்தூர் அருகிலுள்ள ஆழ்வார் திருநகரி பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவி நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றார்.

 

அவருக்கான கல்லூரிக் கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் ரூ.75,000 தொகையை தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் கனிமொழி கருணாநிதி எம்.பி வழங்கினார்.

விழாவில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி., “முத்தமிழறிஞர் கலைஞர், இளைஞர்களுக்காக எண்ணற்ற திட்டங்களை வழங்கி உள்ளார்.

குறிப்பாக, இளைஞர்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னேற வேண்டும் என்ற நோக்கில், தகவல் தொழில் நுட்பத்திற்கென தனிப்பட்ட கொள்கையை கொண்டு வந்தவர்.”

மேலும், “பள்ளிக்கூடங்களில் கணினி அறிவியல் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியதும் மற்றும் இந்தியாவில் முதல்முறையாக டைட்டில் பார்க் உருவாக்கியவரும் கலைஞர் தான்.

அனைவரும் உயர்கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் சிறிய கிராமங்களில்கூட கல்லூரிகளை நிறுவியதன் விளைவாக, இன்று இந்திய அளவில் தமிழகம் உயர்கல்வியில் முன்னணியில் உள்ளது.”

“கலைஞர் வழியில் தான் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மாணவர்களுக்காக ‘தமிழ் புதல்வன்’ திட்டமும் மாணவிகளுக்காக ‘புதுமைப் பெண்’ திட்டமும் கொண்டு வந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

மேலும் நான் முதல்வன் திட்ட மூலம் படிக்கக் கூடிய மாணவர்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் ஒரு பாலமாக இருக்கும் வகையில் பல்வேறு பயிற்சிகள் அளித்து அவர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்று தருகிறது.”

மேலும் “இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் இப்படி அடுக்கிக் கொண்டே போகும் அளவுக்கு திட்டத்தை தந்து கொண்டிருப்பவர் தான் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்” என தெரிவித்தார்.

“கலைஞர் வழியில் தான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மாணவர்களுக்காக ‘தமிழ் புதல்வன்’ திட்டத்தையும், மாணவிகளுக்காக ‘புதுமைப் பெண்’ திட்டத்தையும் கொண்டு வந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

மேலும், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம், மாணவர்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் இடையே ஒரு பாலமாக இருந்து, பல்வேறு பயிற்சிகளை வழங்கி, வேலைவாய்ப்புகளைப் பெறச் செய்வதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.”

“இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இவ்வாறு தொடர்ந்து பல திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருபவர், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்” என்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநில திமுக வர்த்தக அணி இணைச் செயலாளர் உமரி சங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஒன்றிய செயலாளர்கள் இளங்கோ, பாலசிங் ரமேஷ், மாநில மகளிர் அணி பிரச்சார குழு செயலாளர் ஜெசி பொன் ராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *