காஞ்சிபுரத்தில் நகரப் பேருந்து சேவை துவக்கம்
காஞ்சிபுரம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நகரப் பேருந்து சேவையை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரம் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான காஞ்சிபுரத்தில் நகரப் பேருந்து சேவையை கொண்டுவர வேண்டுமென்பதை வலியுறுத்தி, தி.மு.கழக கொள்கைப் பரப்புச் செயலாளர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் அவர்கள், கடந்த 09.09.2025 அன்று காஞ்சிபுரத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும், ஆய்வுக்காக வருகைத் தந்த மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பரிந்துரையின்படி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களின் உத்தரவுபடி, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து, 1. அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை, காரப்பேட்டை – இரயில் நிலையம் – டோல்கேட் – பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வரையில் ஒரு பேருந்து சேவையும்;

2. ஒலிமுகமதுபேட்டை – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – செவிலிமேடு வரையிலும் என இரண்டு வழித்தடங்களில் செல்லும் புதிய நகரப் பேருந்து சேவையை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. சி.வி.எம்.பி.எழிலரசன் அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொடியசைத்து துவக்கி வைத்தார்.
உடன், மாநகராட்சி மேயர் திருமதி மகாலட்சுமி யுவராஜ், மாவட்டப் பொருளாளர் சன்பிராண்ட் கே. ஆறுமுகம், மாநகரச் செயலாளர் சி.கே.வி.தமிழ்ச்செல்வன், 2-வது மண்டலக்குழு தலைவர் எஸ்.சந்துரு, ஒன்றியச் செயலாளர் பி.எம்.குமார், பகுதிக் கழக செயலாளர்கள் கே.திலகர், அ.தசரதன், சு.வெங்கடேசன், தொ.மு.ச. நிர்வாகிகளான சுதாகர், டில்லி, மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, வட்ட, கிளை கழக செயலாளர்கள், நிர்வாகிகள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கோட்ட மேலாளர் மற்றும் போக்குவரத்து துறை அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.

