காஞ்சிபுரத்தில் முன்னாள் நகரமன்ற தலைவர் ஆர்.டி.சேகர் பிறந்தநாள் விழா: கட்சி பிரமுகர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து

காஞ்சிபுரத்தில் முன்னாள் நகரமன்ற தலைவர் ஆர்.டி.சேகர் பிறந்தநாள் விழா: கட்சி பிரமுகர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து

காஞ்சிபுரத்தில் முன்னாள் நகராட்சி தலைவரும், எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளரும், வன்னிய குல சத்திர சங்க தலைவர் சேகர் அவர்களின் பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இதனை ஒட்டி சத்திரம் பகுதியில் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் அதிமுக மாவட்ட செயலாளர் வி. சோமசுந்தரம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அன்னதானத்தினை துவக்கி வைத்தார்.

இதில் வன்னியர் குல சங்க செயலாளர் முத்து செல்வம், பொருளாளர் அருள் மற்றும் ஞானம், ஆதித்யா கிருபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பொன்னாடைகள் அனைத்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இதில் அதிமுக மாநகர பகுதி செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், பூக்கடைச்சத்திரம் வியாபாரிகள் உள்ளிட்ட ஆன்மீக ஆன்றோர்களும், பல்வேறு கட்சி நிர்வாகிகளும், கலந்து கொண்டு பொன்னாடைகள் மலர் மாலைகள் அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை பழனி, அருள், ஜெயக்குமார். J.S. துஷ்யந்த், சைலேஷ், நவீஸ், தஸ்வின் ஆகியோர் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *