காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக விருப்ப மனு

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக விருப்ப மனு

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக விருப்ப மனு முன்னாள் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஜீவி மதியழகன் வழங்கினார்.

தமிழகம் முழுவதும் காங்கிரஸ் பேரியக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் வரும் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கான விருப்பமான வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் காஞ்சிபுரத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஜி வி மதியழகன் காந்தி சாலையில் உள்ள கர்மவீரர் காமராஜர் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு புறப்பட்டார்.

இதில் மாநகர தலைவர் நாதன், மாவட்ட பொறுப்பாளர் சீனிவாச ராகவன், ஐ என் டி யூ சி தலைவரும் முன்னாள் நகர தலைவருமான ராமநீராளன், மாவட்ட வர்த்தக அணி தலைவர் பூக்கடை மணிகண்டன் மாவட்ட துணைத்தலைவர் தாரன், நந்தகோபால், லயன் குப்புசாமி, நூல் கடை ராதாகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பத்மநாபன், அரங்கநாதர் நகர் அன்பு, சாதிக் பாஷா ராமர், லோகநாதன், செவிலிமேடு பிரபு, இளைஞர் அணி யோகி, தென்னேரி சுகுமார், மாநகரப் பகுதி தலைவர் பட்டு காமராஜ், நகர நிர்வாகி மோதிலால், பூந்தோட்டம் பழனி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *