ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு: செல்வப்பெருந்தகையிடம் இராஜாராம்பாண்டியன் வழங்கினார்

ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு: செல்வப்பெருந்தகையிடம் இராஜாராம்பாண்டியன் வழங்கினார்

ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு: காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் இராஜாராம்பாண்டியன் வழங்கினார்

2026 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பம்

ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் பொறுப்புக் குழு உறுப்பினரும், நகர்மன்ற உறுப்பினருமான BRN. இராஜாராம்பாண்டியன் கோபால், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார்.

சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனு

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை MLA அவர்களை சந்தித்த இராஜாராம்பாண்டியன், ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவதற்கான தனது விருப்ப மனுவை வழங்கினார்.

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வரும் நிலையில், இராஜாராம்பாண்டியனும் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்பு

இந்த நிகழ்வின்போது பொறுப்புக்குழு உறுப்பினர் ஜோதிபாலன், மாநில செயலாளர்கள் அடையாறு பாஸ்கரன், ஆனந்தகுமார், ஆர்ட் கணேசன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் காமராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும் வட்டார தலைவர்கள் சேதுபாண்டியன், கிருஷ்ணமூர்த்தி, நகரத் தலைவர் கோபி, மோதிலால் நேரு, பிரேம்குமார், நவாஸ்கனி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இராஜாராம்பாண்டியன் மனு அளித்திருப்பது அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு: செல்வப்பெருந்தகையிடம் இராஜாராம்பாண்டியன் வழங்கினார்

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *