சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் பொறுப்புக் குழு உறுப்பினர் விருப்ப மனு
ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் பொறுப்புக் குழு உறுப்பினரும், நகர்மன்ற உறுப்பினருமான BRN.இராஜாராம்பாண்டியன் கோபால் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கு.செல்வப்பெருந்தகை MLA அவர்களிடம் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட விருப்ப மனுவை வழங்கினார்.
உடன் பொறுப்புக்குழு உறுப்பினர் ஜோதிபாலன், மாநில செயலாளர்கள் அடையாறு பாஸ்கரன், ஆனந்தகுமார், ஆர்ட் கணேசன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் காமராஜ், வட்டார தலைவர்கள் சேதுபாண்டியன், கிருஷ்ணமூர்த்தி, நகர்தலைவர் கோபி, மோதிலால் நேரு, பிரேம்குமார், நவாஸ்கனி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

