காஞ்சிபுரம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு – தாடி கா. கார்த்திகேயன்

காஞ்சிபுரம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு – தாடி கா. கார்த்திகேயன்

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு: வழக்கறிஞர் பிரிவு மாநில பொதுச் செயலாளர் கார்த்திகேயன்

சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் சார்பில் விருப்ப மனு அளிக்க புறப்பட்டார்

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள் சென்னை சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்களை அளித்து வருகின்றனர்.

அந்த வகையில், காஞ்சிபுரம் வழக்கறிஞர் பிரிவு மாநில பொதுச் செயலாளர் தாடி கா. கார்த்திகேயன், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு அளிக்க சென்னைக்கு புறப்பட்டார்.

காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

சென்னைக்கு புறப்படுவதற்கு முன்னதாக காஞ்சிபுரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு தாடி கா. கார்த்திகேயன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் கதிரவன் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டு, பட்டாசுகள் வெடித்தும் கோஷங்கள் எழுப்பியும் அவரை உற்சாகமாக வழியனுப்பினர்.

காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்பு

இந்த நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் மாநகரத் தலைவர் நாதன் முன்னிலை வகித்தார்.

இதில் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் அறந்தை பிரகாஷ், கணபதி, கோ. கார்த்திகேயன், சேட்டு என்கிற லட்சுமிகாந்தன், ஓபிசி பிரிவு பாலமுருகன், இளைஞர் அணி யோகி, டேவிட் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட தாடி கா. கார்த்திகேயன் விருப்பம் தெரிவித்து மனு அளிக்க உள்ள நிலையில், அவருக்கு கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

காஞ்சிபுரம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு – தாடி கா. கார்த்திகேயன்

 

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *