காஞ்சிபுரம் புண்ணியகோட்டிஸ்வரர் ஆலயத்தில் சிவகாமி சமேத நடராஜபெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

காஞ்சிபுரம் புண்ணியகோட்டிஸ்வரர் ஆலயத்தில் சிவகாமி சமேத நடராஜபெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

காஞ்சிபுரம் புண்ணியகோட்டிஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ராவை ஒட்டி சிவகாமி சமேத நடராஜபெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

காஞ்சிபுரம் புண்ணிய கோட்டீஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா விழாவை ஒட்டி சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து சிவகாமி சமேத நடராஜ பெருமானுக்கு பால் தயிர் இளநீர் பழ வகைகள் பல்வேறு வாசனை திரவியங்கலால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் தூப தீப ஆராதனைகள் நடைபெற்றது.

ஆண்டுக்கு ஆறுமுறை நடைபெறும் நடராஜர் அபிஷேக விழா ஆருத்ராவை ஒட்டி விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நடராஜனின் அருளை பெற்று சென்றனர். கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் ஆலய நிர்வாகம் சார்பில் பிரசாதங்களும் வழங்கப்பட்டது.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *