ராமநாதபுரத்தில் நியாய விலை கடை கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு
இராமநாதபுரத்தில் நியாய விலை கடை கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.
இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 2 வது வார்டு பொதுமக்கள் வசதிக்காக முகவை ஊரணி வடக்கு தெரு, பாலசுப்பரமணிய சாமி கோவில் அருகில் கட்டப்பட்ட புதிய நியாயவிலைக்கடை கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார்.
திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் இராம. கருமாணிக்கம் முன்னிலை வகித்தார், ஐந்தாவது வார்டு நகர் மன்ற உறுப்பினர் ராஜாராம் பாண்டியன் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவில் இராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், துணைத்தலைவர் பிரவீன் தங்கம், நகர்மன்ற உறுப்பினர் ஜோதிமணி முத்துராமலிங்கம் மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

