காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் கிரிக்கெட் மற்றும் கைப்பந்து போட்டிகள்

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் திமுக மாநகரபகுதி கழகம் சார்பில் கிரிக்கெட் மற்றும் கைப்பந்து போட்டிகள் நடைபெற்றது.
காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர்கள் கல்லூரி வளாகத்தில் மாநகர திமுக பகுதி கழகம் சார்பில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் காஞ்சிபுரம் மாநகர பகுதி கழகங்கள் சார்பில் நடைபெற்றது.

பகுதி செயலாளர்கள் தலைமையில் கைப்பந்து மற்றும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் சந்துரு திலகர், வெங்கடேசன், தசரதன், பகுதி துணைச் செயலாளர் வழக்கறிஞர் வினோத்குமார், குடியரசு, சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு வரும் ஏழாம் தேதி பரிசுகளும் பாராட்டு சான்றுகளும் வழங்கப்பட உள்ளது.

