காஞ்சிபுரம் சங்கர மடத்தில் குருவாயூரப்பன் ஐம்பொன் சிலை – சங்கர மட பிடாதிபதிகளிடம் சமர்ப்பித்த சென்னை பக்தர்
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் குருவாயூரப்பன் ஐம்பொன் சிலை சங்கர மட பிடாதிபதிகளிடம் சென்னை சேர்ந்த கே. ஜெயராமன் என்ற பக்தர் சமர்ப்பித்தார்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மகா பெரியவர் பரிபூரண ஆசியுடன் கும்பகோணம் ஐயப்பன் ஸ்தபதி என்பவரால் உருவாக்கப்பட்ட சுமார் 2 அடி உயரம் கொண்ட ஐம்பொன் குருவாயூரப்பன் திருவுருவ சிலையை சென்னை சேர்ந்த கே ஜெயராமன் என்கின்ற பக்தர் சங்கராச்சாரியார் சுவாமிகளிடம் சமர்ப்பித்தார்.
இதில் ஆச்சாரியார் சாமிகள் புஷ்பங்கள் மற்றும் இனிப்புகள் வைத்து பூஜை செய்து பெற்றுக் கொண்டார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆச்சாரியா சுவாமிகளின் அனுக்கிரகம் பெற்று சென்றனர்.

