காஞ்சிபுரம் முத்தீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ விழா

காஞ்சிபுரம் முத்தீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ விழா

காஞ்சிபுரம் முத்தீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ விழா ஆலய நிர்வாக அறங்காவலர் குழு தலைவர் சரவணகுமார் தலைமையில் விமர்சையாக நடைபெற்றது.

காஞ்சிபுரம்காந்தி சாலையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த முத்தீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் மூலவர் முத்தீஸ்வரர் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று பிரதோஷ பகவான் நந்தி வாகனத்தில் ஆலய வளாகத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

விழா ஏற்பாடுகளை ஆலய அறங்காவல குழு தலைவர் சரவணக்குமார் பக்தர்களுடன் இணைத்து சிறப்பாக செய்திருந்தனர். இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

விழா உபயத்தினை சுந்தரம் நாயக்கர் குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

இதில் காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானின் பேரருளை பெற்று சென்றனர்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *