திருவண்ணாமலையில் நடைபெறும் இளைஞரணி மாநாட்டுக்கு புறப்பட்ட காஞ்சிபுரம் திமுக இளைஞரணியினர்
திருவண்ணாமலையில் நடைபெறும் இளைஞரணி மாநாட்டுக்கு காஞ்சிபுரம் திமுக இளைஞரணி சார்பில் ஏராளமானோர் பகுதி செயலாளர்கள் தலைமையில் புறப்பட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் திருவண்ணாமலை பகுதியில் நடைபெறும் இளைஞரணி மாநாட்டிற்கு மாவட்ட அமைப்பாளர் யுவராஜ் தலைமையில் புறப்பட்டனர்.
அந்த வகையில் பெரிய காஞ்சிபுரத்தில் பகுதி செயலாளர் திலகர் தலைமையிலும், மேட்டு தெருவில் உள்ள மாநகர அலுவலகத்தில் இருந்து பகுதி செயலாளர் தசரதன் தலைமையிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பகுதி செயலாளர் வெங்கடேசன் தலைமையிலும் சின்ன காஞ்சிபுரத்தில் பகுதி செயலாளர் சந்துரு தலைமையிலும் ஆயிரக் கணக்கான இளைஞர்கள் புறப்பட்டு சென்றனர்.
இதில் மாநகர இளைஞரணி அமைப்பாளர் சுகுமார் வட்டச் செயலாளர் சிட்டிபாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

