காஞ்சிபுரத்தில் களை கட்டிய கட்டிய மகளிர் தின விழா

காஞ்சிபுரத்தில் களை கட்டிய கட்டிய மகளிர் தின விழா

பெண்களே இவ்வுலகின் சக்தி.
பெண்களின் புன்னகையும் உலகையே மாற்றும் வல்லமை வாய்ந்தது.

  • என்பது அனைவரும் அறிந்த விஷயம் –

இத்தகைய சிறப்பான மகளிரைக் கொண்டாடும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் விளக்கடி கோவில் தெருவில் உள்ள “Sri Venkateswara Physio & Fitness v3” உடற்பயிற்சிக்கூடத்தில் மகளிர் தினம் மிகச் சிறப்பாகவும், ஆனந்தமாகவும் கொண்டாடப்பட்டது.

அனைவரும் மகிழ்வடையும் வகையில் வேடிக்கை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

குறிப்பாக இசை நாற்காலி விளையாட்டு, பலூனைகளைக் கொண்டு அனைவரும் வெடிக்காமல் குழுவாக நகர்தல், கால்களில் பிடித்துக்கொண்டு உடையாமல் அசைதல் போன்ற விளையாட்டுகள் சிங்கப்பெண்களை வெகுவாகக் கவர்ந்தது மட்டுமல்லாமல் ஊக்கத்தையும் அளித்தது என்றே கூற வேண்டும்.

உவகையுடன் அவர்கள் விளையாட்டுகளில் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

பெண்கள் உடல் நலன் மட்டுமல்லாமல் மனநலனும் மேம்படும் வகையில் இந்த நாள் அருமையாக அமைந்தது என்றே கூற வேண்டும்.

பெண்களைப் போற்றுவோம், அவர்தம் நலன் பேணுவோம். என்கின்ற வகையில் இந்த மகளிர் தின விழா சிறப்பாக நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை ரமேஷ் மற்றும் அபிராமி ரமேஷ் ஆகியோர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

கலந்து கொண்ட அனைவருக்கும் பாகுபாடு இன்றி பரிசுகள் வழங்கப்பட்டது.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *