காஞ்சிபுரம் பூஞ்சோலை கன்னியம்மன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை

காஞ்சிபுரம் பூஞ்சோலை கன்னியம்மன் ஆலயத்தில் 46 ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை விமர்சையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் ராயன் குட்டை பள்ள தெருவில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ காஞ்சி பூஞ்சோலை கன்னியம்மன் தேவஸ்தானத்தில் 46 ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை விமர்சையாக நடைபெற்றது.
இதில் காலை 108 சங்காபிஷேகமும் அதனைத் தொடர்ந்து பூஞ்சோலை கன்னியம்மன் மண்டலி குழுவினரால் சௌந்தர்யலஹரி லலிதா சகஸ் நாம பாராயணம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து மாலை திருவிளக்கு பூஜை விமர்சையாக நடைபெற்றது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு குங்கும அர்ச்சனை மற்றும் அம்மன் பக்தி பாடல்கள் பாடி வழிபாடு செய்தனர்.
கலந்து கொண்ட பெண்கள் அனைவருக்கும் பட்டு வஸ்திரம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் ஸ்ரீ காஞ்சி பூஞ்சோலை கன்னியம்மன் தேவஸ்தானத்துடன் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.

