காஞ்சிபுரம் மாவட்ட தலைநகர் பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம்


காஞ்சிபுரம் மாவட்ட தலைநகர் பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சங்கத் தலைவர் இ. ஜாபர் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் பாஸ்கரன் வரவேற்புரையாற்றினார். சங்கத்தின் வளர்ச்சிக்காக ஆலோசனை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பொருளாளர் விஜயன், கார்த்திகேயன், மூத்த பத்திரிகையாளர்கள் ஜோதி, ஜெயபிரகாஷ், வெங்கடேசன், தன்ராஜ், சங்க வளர்ச்சிக்காக பல்வேறு ஆலோசனை வழங்கினார்கள்.
சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ரவி நன்றி உரையாற்றினார்.


