காஞ்சிபுரம் சங்கரமடத்தில் வாசிக நிரந்தர சுபாஷினி பிட்சா வந்தனம்
காஞ்சிபுரம் சங்கரமடத்தில் 65 ஆவது ஆண்டு வாசிக நிரந்தர சுபாஷினி பிட்சா வந்தனம் சைலஜா ஜெய்சங்கர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மகா பெரியவரின் உத்தரவின் பேரில் 1962 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட வார்சிக நிரந்தர சுபாஷினி பிட்சா வந்தனம் சார்பில் வசந்த நவராத்திரியை ஒட்டி உற்சாக வந்தனம் நடைபெற்றது.
65 ஆவது ஆண்டு நடைபெறும் இந்த வைபவத்தில் மூன்றாவது தலைமுறையாக சைலஜா ஜெய்சங்கர் இந்த வைபவத்தினை ஆச்சாரியா சுவாமிகள் அனுகிரகத்துடன் நடத்தினார்.
இதில் காலை காமாட்சி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் மதியம் மகா பெரியவர் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் செய்து வழிபாடு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சிறப்பு மாவிளக்கு பூஜையும் நடைபெற்றது. இந்த பிக்ஷா வந்தன விழா வசந்த நவராத்திரியில் வரும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது.
இவ்விழா ஏற்பாடுகளை ஆச்சாரியா சுவாமிகள் அனுகிரகத்துடன் சைலஜா ஜெய்சங்கர் குழுவினுடன் இணைந்து சிறப்பாக செய்திருந்தார்.


