திருவைகுண்டத்தில் புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள்: கனிமொழி கருணாநிதி நேரில் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் நடைபெற்றுவரும் புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகளை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி S.அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

