காஞ்சிபுரம் பாரதிதாசன் மெட்ரிக் பள்ளியில் பிளஸ்-2 தேர்வில் 100% தேர்ச்சி
- காஞ்சிபுரம் பாரதிதாசன் மெட்ரிக் பள்ளியில் பிளஸ்-2 தேர்வில் 100% தேர்ச்சி!
- மாணவர்கள் இனிப்பு வழங்கி பள்ளி தாளாளர் அருண்குமாருக்கு வாழ்த்து!

காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் அமைந்துள்ள பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி யில் இந்த ஆண்டு நடைபெற்ற பிளஸ்-2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளியின் தாளாளரும் கல்வி காவலருமான அருண்குமார் தெரிவித்தார்.

இந்த சாதனையை முன்னிட்டு மாணவர்கள் பள்ளி நிர்வாகத்தினருக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
இதுகுறித்து அருண்குமார் கூறுகையில், “கடவுளின் அருளும், பெற்றோர்களின் ஒத்துழைப்பும், மாணவர்களின் ஒழுக்கமும், ஆர்வமுடன் கல்வி கற்ற உழைப்பும் தான் 100% தேர்ச்சிக்கு காரணம்” என பெருமையுடன் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பள்ளியின் செயலர் ரமேஷ்குமார் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
