பண்டிட் தீனதயாள் உபாத்தியாய நினைவு நாள்: காஞ்சிபுரம் மாவட்ட பாஜக சார்பில் அனுசரிப்பு

பாஜக அகில இந்திய பொதுச் செயலாளராக இருந்து உயிர் துறந்த பண்டிட் தீனதயாள் உபாத்தியாய நினைவு நாள் காஞ்சிபுரம் மாவட்ட பிஜேபி சார்பில் அனுசரிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட பிஜேபி அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் தாமரை.ஜெகதீசன் தலைமையில் அகில இந்திய பாரதிய ஜனதா பொதுச் செயலாளரும் பிஜேபி உருவாக்க பெரும்பங்கு வகித்த வகித்தருமான பண்டிட்தீன்தயாள் உபத்யாய அவர்களின் நினைவு அனுசரிக்கப்பட்டது.

இதில் காஞ்சி பாஜக சார்பாக சமர்ப்பண தினமாக மோட்சம் தீபமேற்றி புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது.
இன்நிகழ்வில் மாவட்ட தலைவர் தாமரை ஜெகதீசன் தலைமையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் கூட்டுறவு பிரிவு காஞ்சி.ஜீவானந்தம், மாவட்ட நிர்வாகிகள் கூரம் விஸ்வநாதன், வாஞ்சிநாதன் அதிசயம் குமார், காஞ்சி மேற்கு மண்டல் தலைவர் தனலட்சுமி, தியாகு, யுவராஜ், மதன்ராஜ், செந்தில்குமார். அரிகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


