காஞ்சிபுரம் பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வுக்கு முன் தாளாளரிடம் ஆசி

காஞ்சிபுரம் பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வுக்கு முன் தாளாளரிடம் ஆசி

காஞ்சிபுரம் பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வுக்கு முன் தாளாளரிடம் ஆசி

பள்ளி தாளாரை கட்டி அனைத்தும், காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றும் தேர்வு எழுதச் சென்ற தனியார் பள்ளி 10ம் வகுப்பு மாணவர்களின் வினோத செயல்

தேர்வுக்கு முன் இறைவணக்கம்: காஞ்சிபுரம் பள்ளி மாணவர்கள் தாளாளரிடம் ஆசி பெற்றனர்

குருவை வணங்கி தேர்வறைக்கு சென்ற மாணவர்கள்

காஞ்சிபுரம் மாநகராட்சி ஓரிக்கை பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மேல்நிலைப் பள்ளியில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் தேர்வுக்கு முன்பாக இறைவணக்கம் செலுத்தி, பள்ளி தாளாளரிடம் ஆசி பெற்றனர்.

தாளாளரிடம் ஆசிபெற்ற மாணவர்கள்

தேர்வு தொடங்குவதற்கு முன்னதாக பள்ளி வளாகத்தில் மாணவர்கள் இறைவணக்கம் செலுத்தினர். தொடர்ந்து, மாணவிகள் பள்ளி தாளாளரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர். மாணவர்களும் தாளாளரை கட்டியணைத்து வாழ்த்துகளைப் பெற்றதுடன், அவரது காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

இதையடுத்து, மாணவர்கள் அனைவரும் தேர்வு அறைகளுக்கு சென்று தேர்வு எழுதத் தயாராகினர்.

அச்சமின்றி தேர்வு எழுத அறிவுரை

மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பள்ளி தாளாளர், “எவ்வித அச்சமும், பயமுமின்றி தேர்வை சிறப்பாக எழுத வேண்டும்” என அறிவுரை வழங்கினார். மேலும், மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்றும் வாழ்த்தினார்.

குருவுக்கு மரியாதை செலுத்திய மாணவர்கள்

தேர்வுக்கு முன்னதாக மாணவர்கள் தாளாளரிடம் ஆசி பெற்ற சம்பவம், பள்ளியில் கவனம் பெற்றது. கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் மற்றும் தாளாளரை குருவாக மதித்து மரியாதை செலுத்தும் வகையிலும், மாணவர்களுக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் இடையேயான அன்பையும் வெளிப்படுத்தும் நிகழ்வாகவும் இது பார்க்கப்பட்டது.

தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு இறைவணக்கம் மற்றும் பெரியோரின் ஆசீர்வாதம் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைந்ததாக பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *