“ஜாதி, மதமற்றவர் என்பதற்கு சான்று தேவையில்லை” – சென்னை உயர்நீதிமன்றம்

“ஜாதி, மதமற்றவர் என்பதற்கு சான்று தேவையில்லை” – சென்னை உயர்நீதிமன்றம்

ஜாதி மத மற்றவர் என்பதை நாம் தான் பின்பற்ற வேண்டுமே தவிர, அதற்கு சான்றிதழ் அவசியம் இல்லை என, நடிகர் பார்த்திபன் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

ஜாதி, மதமற்றவர் என சான்று வழங்கக் கோரி அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து சான்று வழங்க சோழிங்கநல்லூர் தாசில்தாரருக்கு உத்தரவிடக் கோரி நடிகர் பார்த்திபன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் உத்தரவின்படி, நடிகர் பார்த்திபனுக்கு, ஜாதி, மதம் சாராதவர் என ஏப்ரல் 27ம் தேதி ( 27.04.2026 ) சான்று வழங்கப்பட்டது.

இந்த வழக்கு, மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நேரில் ஆஜரான பார்த்திபன், அர்த்தமுள்ள ஒரு சமுதாயம் உருவாக வழி செய்துள்ளதாக நீதிபதிக்கு நன்றி தெரிவித்தார்.அதற்கு பதில் அளித்த நீதிபதி, ஜாதி-மதம் அற்றவர் என்பதை தெரிவிக்க சான்று பெறவேண்டிய அவசியம் இல்லை, இதுபோன்று சான்று வழங்க தாசில்தாருக்கும் அதிகாரம் இல்லை என்றும்,

ஏற்கனவே இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலேயே சான்று வழங்க உத்தரவிட்டதாகவும் கூறினார்.மேலும், இந்த சான்று விளம்பரத்துக்கு வேண்டுமானால் பயன்படும், உண்மையில் ஜாதி மத மற்றவர் என்பதை நாம் தான் பின்பற்றுவதுடன், நம் நடத்தை மூலம் தான் அதை காட்ட வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.

இதையடுத்து, பார்த்திபனுக்கு ஜாதி மத மற்றவர் என சான்றிதழ் வழங்கியதை பதிவு செய்து நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.

Abi

https://makkalkavasam.com/

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *