காஞ்சிபுரம் சோழன் மெட்ரிக் பள்ளி மாணவர்களின் அசத்தல் சாதனை

காஞ்சிபுரம் சோழன் மெட்ரிக் பள்ளி மாணவர்களின் அசத்தல் சாதனை
  • காஞ்சிபுரம் சோழன் மெட்ரிக் பள்ளி மாணவர்களின் அசத்தல் சாதனை! 
  • பிளஸ்-2 பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்கள்!

காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள சோழன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு நடைபெற்ற பிளஸ்-2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெறப்பட்டுள்ளது.

மிகவும் சாதாரண குடும்பங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் பயிலும் இந்த பள்ளி, காஞ்சிபுரத்தில் நூற்றுக்கு நூறு சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளில் முன்னிலை பெற்றுள்ளதாக பள்ளியின் தாளாளர் டாக்டர் சஞ்சீவி ஜெயராம் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

மேலும், 550 மதிப்பெண்களுக்கு மேல் 10 மாணவர்களும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 58 மாணவர்களும் பெற்றுள்ளதாக அவர் கூறினார்.

இந்த வெற்றிக்காக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த அவர், “மாணவர்களின் கடின உழைப்பும், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும், பெற்றோர்களின் ஒத்துழைப்பும் தான் இந்த சாதனைக்கு காரணம்” என்றார்.

இந்த சாதனையை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *