காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மனு: மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் மகாத்மா காந்தி பெயர் தொடர வலியுறுத்தல்
காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் மகாத்மா காந்தி பெயர் தொடர வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மாவட்ட தலைவர் ஸ்ரீபெரும்புதூர் எஸ்.ஏ.அருள்ராஜ் மனு அளித்தார்.

காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் புதிதாய் நியமிக்கப்பட்ட மாவட்ட தலைவர் ஸ்ரீபெரும்புதூர் எஸ் ஜே அருள்ராஜ் தலைமையில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை தொடர் வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகம் ஆகியோரிடம் நேரில் மனு அளித்தார்.
முன்னதாக புரியாத நியமிக்கப்பட்ட மாவட்ட தலைவர் என அறிமுகப்படுத்திக் கொண்டு மலர் கொத்துகளை வழங்கி அறிமுகப்படுத்திக் கொண்டார்.

இதில் மாநகர தலைவர் நாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பத்மநாபன், அரங்கநாதர், அன்பு, ஆசிரியர் நிக்கோலஸ், மாநகர பகுதி தலைவர்கள் காஞ்சி காமராஜ், பட்டு காமராஜ், மாநில வழக்கறிஞர் அணி பொதுச் செயலாளர் குருராஜ், மாவட்ட சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் முருகன் சாந்தகுமார், நந்தகுமார், பவுல், மூத்த காங்கிரஸ் தலைவர்கள் லயன் குப்புசாமி, நூல் கடை ராதாகிருஷ்ணன், இளைஞர் அணி யோகி, பிள்ளையார்பாளையம் பாலமுருகன், லோகநாதன், சந்தானம், செவிலிமேடுபிரபு, வாலாஜாபாத் வட்டாரத் தலைவர் சிவக்குமார், நகர தலைவர் சுரேஷ் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

