“மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்”- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய திருப்பரங்குன்றம் சுப்பரமணிய கோயில் அறங்காவலர்!
மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம்..
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய திருப்பரங்குன்றம் சுப்பரமணிய கோயில் அறங்காவலர்!

சித்திரைத் திருவிழாவின் 10-ஆம் நாள் நிகழ்வான உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் – சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் இன்று (28 ஏப்ரல் 2026) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மிக விமரிசையாக நடைபெற்றது. இந்த தெய்வீகத் திருமணத்தைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
இந்த நிலையில், திருக்கல்யாணத்தையொட்டி கோயிலைச் சுற்றிலும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு பிரம்மாண்ட அறுசுவை விருந்து மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் அறங்காவலர் சண்முகசுந்தரம் ஏற்பாட்டில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அப்போது ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் முனைவர் மணிவண்ணன், மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு, என். கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
