காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மார்கழி மாத கச்சேரி

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயந்திர சரஸ்வதி சாமிகள் மார்கழி மாத கச்சேரியில் பங்குபெற்ற வித்வான்களுக்கு ஆசி வழங்கினார்.
காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கர மடத்தில் சங்கராச்சாரியார் சுவாமிகள் ஆசியுடன் நடைபெற்று வரும் மார்கழி பஜனை திருவிழாவில் அமெரிக்காவை சேர்ந்த ஷாநிகா பாண்டே அவர்களின் வாய்ப்பாட்டு மற்றும் வீணை கச்சேரி நடைபெற்றது.

இதில் அனிருத் கணேசன் மிருதங்கம், ராகவா வயலின் கச்சேரி சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பிருந்தாவனத்திற்கு சிறப்பு தீப தூப ஆராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
மேலும் சங்கராச்சாரியார் சுவாமிகள் கலந்து கொண்ட வித்வான்களுக்கு பிரசாதங்கள் வழங்கி ஆசி வழங்கினார். இதில் நீண்ட வரிசையில் நின்று ஏராளமான பக்தர்கள் ஆச்சாரியா சுவாமிகளின் அனுகிரகம் பெற்று சென்றனர்.

மேலும் ஏராளமான பக்தர்கள் பாத பூஜை செய்து வழிபாடு செய்தனர். கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்களும் அன்னபிரசாதங்களும் வழங்கப்பட்டது.

