தூத்துக்குடியில் மகிளா காங்கிரஸ் சார்பில் பெண்களுக்கு பொங்கல் நலத்திட்ட உதவிகள்

தூத்துக்குடியில் மகிளா காங்கிரஸ் சார்பில் பெண்களுக்கு பொங்கல் நலத்திட்ட உதவிகள்

தூத்துக்குடியில் மகிளா காங்கிரஸ் சார்பில் பெண்களுக்கு பொங்கல் நலத்திட்ட உதவிகள்

சேலை, அரிசி, இனிப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கி சிறப்பிப்பு

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி மட்டக்கடையில் அமைந்துள்ள மகிளா காங்கிரஸ் அலுவலகத்தில் பெண்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மகிளா காங்கிரஸ் தலைவி தலைமையில் நிகழ்ச்சி

மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி பிரீத்தி வினோத் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெண்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சேலை, அரிசி, இனிப்பு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டதுடன், அவர்களின் குடும்பங்களுடன் மகிழ்ச்சியாக பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் நலத்திட்டப் பொருட்கள் வழங்கப்பட்டன.

காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்பு

நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவி அனத்தாசி, வார்டு பொறுப்பாளர் மோனிஷா, ஊடகப் பிரிவு அன்னமரியா உள்ளிட்ட மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்ட நிகழ்வு, அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றது.

தூத்துக்குடியில் மகிளா காங்கிரஸ் சார்பில் பெண்களுக்கு பொங்கல் நலத்திட்ட உதவிகள்

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *