தூத்துக்குடியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிய கனிமொழிMP

தூத்துக்குடியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிய கனிமொழிMP

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிட 2,22,91,710 அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்வாழ் இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை, முழுக்கரும்பு மற்றும் ரூ.3,000/- ரொக்கம் வழங்கும் திட்டம் மற்றும் 1 கோடியே 77 இலட்சத்து 64 ஆயிரம் சேலைகள், 1 கோடியே 77 இலட்சத்து 22 ஆயிரம் வேட்டிகள் வழங்கும் திட்டம் ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில், (09/01/2026) தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ஜெயராஜ் சாலையில் நியாய விலைக்கடையில் பொதுமக்களுக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கினார்.

இந்த நிகழ்வில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Senthil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *