காஞ்சிபுரம் செவிலிமேடு கைலாசநாதர் ஆலயத்தில் ஐப்பசி மாத அன்னாபிஷேக விழா

காஞ்சிபுரம் செவிலிமேடு கைலாசநாதர் ஆலயத்தில் ஐப்பசி மாத அன்னாபிஷேக விழா காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி சங்கராச்சாரியார் சுவாமிகள் பரிபூரண ஆசியுடன் நடைபெற்றது.
காஞ்சிபுரம் செவிலிமேடு ஏரிக்கரை ஓரம் அமர்ந்து அருள் பாலித்து வரும் காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு உட்பட்ட செவிலிமேடு ஶ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் ஐப்பசி மாத அன்னாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.
இதில் மூலவர் கைலாசநாதருக்கு பல வகையான கனிகள், காய்கறிகள் ஆகியவற்றினால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு நெய்வேதியர்கள் சமர்ப்பிக்கப்பட்டு தூப தீப ஆராதனைகள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் காமாட்சி அம்மன் ஆலய ஸ்ரீ காரியம் சுந்தரேச ஐயர் செயல் அலுவலர் ராஜலட்சுமி, அலுவலக கணக்கர் பத்ரி நாராயணன், ஆலய அர்ச்சகர் மகேஷ் சிவாச்சாரியார், ஆலய பிரதோஷ கமிட்டி மணி உள்ளிட்ட செவிலிமேடு கிராம மக்கள், பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



