காஞ்சிபுரம் புத்தகத் திருவிழா: புதிய புயல் நடன குழுவினரின் கலை நிகழ்ச்சி
காஞ்சிபுரம் புத்தகத் திருவிழாவில் புதிய புயல் நடன குழுவினரின் கலை நிகழ்ச்சி அனைவரையும் கவரும் வண்ணம் இருந்தது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புத்தகத் திருவிழா மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்று வருகிறது. மேலும் பல்வேறு கலைஞர்களின் சிறப்பு உரையும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.
இந்த வகையில் புதிய புயல் நடன குழுவினரின் நடன நிகழ்ச்சி மாஸ்டர் கிருஷ்ணா தலைமையில் நடைபெற்றது.
இதில் நடன கலைஞர்களின் வித்தியாசமான நடனங்கள் அனைவரையும் கவரும் வண்ணம் இருந்தது.

இதில் ஏராளமான பொதுமக்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

