காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சுவாமிகளிடம் ஆசி : மகா பெரியவர் பிருந்தாவனத்தில் தரிசனம்
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஐஐடி டைரக்டர் திரு.காம கோட்டி சங்கராச்சாரியார் சுவாமிகளிடம் ஆசி பெற்று மகா பெரியவர் பிருந்தாவனத்தில் தரிசனம் மேற்கொண்டார்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சங்கராச்சாரியார் சுவாமிகள் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார். காலை முதல் சுமார் 12 மணி நேரம் பக்தர்களை சந்தித்து அருள் ஆசி வழங்கினார்.
இதில் சென்னை ஐஐடி டைரக்டர் திரு . காமகோட்டி சாமிகளிடம் ஆசி பெற்றார். இதனைத் தொடர்ந்து மகா பெரியவர் பிருந்தாவனத்தில் சிறப்பு தீபாரதனைகள் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட காமகோடி அவர்களுக்கு சங்கர மடத்தின் ஸ்ரீ காரியம் செல்லா விஸ்வநாதன் சாஸ்திரி மலர்மாலைகள் அணிவித்து பிரசாதங்கள் வழங்கினார்.

இதில் சங்கர மடத்தின் மேலாளர் சுந்தரேஸ ஐயர். கேம்ப் மேலாளர் ஜானகிராமன், நிர்வாகி கீர்த்தி வாசன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

