தள்ளாத வயதில் வாக்குச் சாவடிக்கு சென்ற முதியவர்

மூத்த குடிமக்களுக்கு தபால் வாக்கு செலுத்த அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும், பொன்னேரி அருகே நேரடியாக வாக்குச்சாவடிக்கு வந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றியது மகிழ்ச்சியாக உள்ளதென, 100 வயதைக் கடந்த முதியவர் ஸ்டீபன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் புதுமண தம்பதியினர், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரடியாக வந்து தங்களது வாக்கை செலுத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 103 வயது முதியவர் ஸ்டீபன் நேரடியாக வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கை செலுத்தினார்.
85 வயது கடந்த மூத்த குடிமக்களுக்கு தபால் வாக்கு செலுத்த அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும், நேரடியாக வாக்குச்சாவடிக்கு வந்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றிய ஸ்டீபன், வயது முதிர்ந்த போதிலும் நேரடியாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்துவது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டார்.

