தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிறப்பு திருப்பலியில் பங்கேற்பு
தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பனிமயமாதா பேராலய 443வது ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருவிழா திருப்பலி இன்று காலை மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நடைபெற்றது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிறப்பு திருப்பலியில் புத்தாடை அணிந்து பங்கேற்பு!
திருவிழாவை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.

தூத்துக்குடியில் உள்ள பனிமய மாதா பேராலயம் உலக புகழ்பெற்றதாகும் இந்த ஆலயம் இத்தாலி ரோம் நகரில் அமைந்துள்ள வாடிகன் சிட்டியால் பசிலிகா அந்தஸ்து வழங்கப்பட்ட ஆலயமாகும்.
இந்த ஆலயத்தின் 443ம் ஆண்டு திருவிழா கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஒவ்வொரு நாளும் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு திருப்பலிகள் நற்கருணை பவனி ஆகியவை நடைபெற்றது.
இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் திருவிழா திருப்பலி நடைபெற்றது.

இதில் உலக மக்கள் அனைவரும் இன்புற்று இருக்க வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த திருவிழா திருப்பலியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புத்தாடை அணிந்து குடும்பத்துடன் பங்கேற்றனர்.
திருவிழாவிற்கான பாதுகாப்பு பணிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் சுமார் 1000 காவல்துறையினர் ஈடுபட்டனர்.
திருவிழாவை முன்னிட்டு இன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.

