வெங்காடு மற்றும் இரும்பேடு நியாய விலை கடைகளில் பொங்கல் தொகுப்பு

வெங்காடு ஊராட்சியில் அடங்கிய வெங்காடு மற்றும் இரும்பேடு நியாய விலை கடைகளில் தமிழ்நாடு அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.3000 ரொக்கம் வெங்காடு ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் தலைமையில் வழங்கப்பட்டது.
இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அஸ்வினி வினோத், எத்திராஜன், முருகன் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கௌரி ராதாகிருஷ்ணன், கிராம நாட்டான்மைதாரர்கள் மற்றும் பொது மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக மு திருப்பெரும்புதூர் கூட்டுறவு வங்கி தலைவர், மு வெங்காடு ஊராட்சி மன்ற தலைவர், ஏரி நீர் பாசன சங்கத் தலைவர் உலகநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.


